search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ மாணவிகள்"

    • விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
    • சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ கத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.

    இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடை பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் கூறுவதற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அம்மா அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

    மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாரிசு அமைச்சரின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களிடம் இருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாரா ஒலிம்பிக் உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன் என்று கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரை உச்சி முகர்ந்து அவரோடு படம் எடுத்தது மட்டுமின்றி, தன் முதல்-அமைச்சர் தந்தையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெற்று விளம்பரம் தேடிய அதிபுத்தி சாலி மந்திரியிடம் இதை விடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

    எனவே பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • “நீயா நானா” கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்
    • மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந் துள்ள ரோகிணி பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ மாணவி களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பேராசிரியை தங்கம் வரவேற்புரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனியார் டிவி புகழ் "நீயா நானா" கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்.அப்போது அவர் நேரத்தின் முக்கியத்து வம் பற்றியும், மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது பற்றியும், தன் துறையில் தனித்துவம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்து, மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைமுதலாம் ஆண்டு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர், பேராசிரியை செய்து இருந்தனர். முடிவில் பேராசிரியை ஜார்ஜ் மேரி ஆர்த்தி நன்றி கூறினார்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக தவமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    கோவில்பட்டி:

    பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சிலம்ப பயிற்சி ஆசிரியர் சண்முகசுந்தர கணபதி, நகர்மன்ற உறுப்பினர் லவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 14 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவரும் பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் நிவேதா, குழந்தைகள் நலப் பணியாளர் சபீனா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஸ் நிஷா பேகம், மேற்பார்வையாளர்கள் அமுதம்மாள், பாலம்மாள், கனக லட்சுமி மற்றும் மன்ற ஆலோசகர் பாலமுருகன் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    • சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பிரகலாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை
    • சுமார் 70 மாணவ மாணவிகளுக்கு ஒளி ஏற்றிவைத்தனர்

    கன்னியாகுமரி :

    தலக்குளம் பிஎஸ் நர்சிங் கல்லூரி மற்றும் பள்ளியின் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கான தீப ஒளியேற்றும் விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் தாளாளர் நரம்பியல் நிபுணர் டாக்டர் ப.ஆறுமுகம், தலைமை தாங்கினார். மருத்துவப்பணிகள் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பிரகலாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியை சுபிதாஜினி வரவேற்புரை வழங்கினார்.

    இவ்விழாவில் கல்லுரி நிர்வாக அதிகாரி குற்றாலம் பிள்ளை, மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர். சரோஜினி, நரம்பி யல் நிபுணர் டாக்டர். பழனியாண்டி, குழந்தை நல நிபுணர் டாக்டர்.சுனிதா, குடியுரிமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஜூலியா, பி.எஸ் கல்லூரி முதல்வர் டாக்டர். அமுது மற்றும் மக்கள்தொடர்பு அதிகாரி நாராயணபிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.

    கைவிளக்கு ஏந்திய காரிகையான நைட்டிங்கே லின் விளக்கை பி.எஸ்.மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர்.டோரல் டுவா ஏற்ற அதைத்தொடர்ந்து பி.எஸ் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர்.ஜோஸ்பின் சுதா, மற்றும் பேராசிரியை பால் சஜிலா, ஆகியோர் சுமார் 70 மாணவ மாணவிகளுக்கு ஒளி ஏற்றிவைத்தனர். பின் பி.எஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அமுது உறுதிமொழி மாணவர்க ளுக்கு உரைத்தார்.

    விழாவின் முடிவில் கல்லூரி பேராசிரியர் அபிஷாபெல் நன்றியுரை யாற்றினார்.

    ×